பொது சிவில் சட்டத்தை தீவிரமாக ஆதரித்த ஜெயலலிதா - இன்று அதிமுக எதிர்ப்பு!
பொது சிவில் சட்டத்தை பாஜக கூட்டணியில் அதிமுக எதிர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது சிவில்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பெரும் ஆர்ப்பட்டங்கள், கண்டங்கள் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதன் வரிசையில், நல்லாட்சி வழங்க முடியாமல்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார். மேலும், திமுக பொது சிவில் சட்டத்தை மிக கடுமையாக எதிர்க்கிறது.
அதிமுக எதிர்ப்பு
மக்களுக்கு இது ஆபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து திமுக கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக 20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பொது சிவில் சட்டத்தை ஆதரித்தது. 2003ல் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நாடு முழுவதிலும் ஒரே மாதியான சிவில் சட்டம் கொண்டு வரப்படுவது இந்த நேரத்தில் அவசியமானது. அதைநான் முழுமையாக ஆதரிக்கிறேன் என ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுக 2019 லோக்சபா தேர்தல் அறிக்கையில் அதை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக எதிராகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் குறித்த எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.