பொது சிவில் சட்டத்திற்கான அவசியம் என்ன? - எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்!
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளனர்.
பொது சிவில் சட்டம்
போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" துன்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த பொது சிவில் சட்டம் குறித்து பல கட்சியினர் ஆலோசனை நடத்தினர். பின்னர், இந்த சட்டம் எதிரானது, இதற்கான அவசியம் தற்போது இல்லை என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கட்சிகள் எதிர்ப்பு
இந்நிலையில், இன்று நாடாளுமன்ற நிலைகுழு கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தலுக்கு 300 நாட்களே உள்ள நிலையில் பொதுசிவில் சட்டத்துக்கான அவசரம் என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பொதுசிவில் சட்டத்துக்கு தி.மு.க , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, "இந்த விவகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுகிறது, தற்போதைய நிலையில் இது தொடர்பான விவாதமே தேவை இல்லை" என்று கூறியுள்ளனர்.