செந்தில் பாலாஜி வாயை திறந்தால் தான் திமுக சிக்கும் - ஜெயக்குமார் பேச்சு!
செந்தில் பாலாஜி குணமடைந்து வாயை திறந்தால் நிறைய பேர் உள்ளே போவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
திருவள்ளூர் அருகே நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஒரு செய்தியாளர் 'செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சை பொய்யானது;
அமலாக்கத்துறை தான் வெளிப்படுத்த வேண்டும் என பிரேமலதா சொல்லி இருக்கிறாரே' அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
பேட்டி
இந்நிலையில், பதிலளித்த ஜெயக்குமார், "அவர் சொல்வது தவறு கிடையாது. நாட்டு மக்கள் ஆப்ரேஷன் உண்மையிலேயே நடந்ததா என்கின்ற விவரத்தை அவர்கள் மட்டுமல்ல, எல்லாருமே எதிர்பார்க்கிறார்கள்.
அதனால் தெளிவுபடுத்த வேண்டியது மருத்துவத்துறையின் கடமை. அவர் நல்லா இருந்தால்தான் வாயை திறக்க முடியும். அவர் வாயை திறந்தால் தான் நிறைய பேர் உள்ளே போக முடியும். அதனால் அவர் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக பேச வேண்டும். நாட்டு மக்களை பொறுத்தவரை தேமுதிக பொருளாளர் கேட்டது கரெக்ட்தான்" துன்று கூறியுள்ளார்.