முட்டைய கூமூட்டைகள் தான் காட்டும்..!! யூடியூபரான முதல்வர்!! அதிமுகவின் ஜெயக்குமார் காட்டம்!!
நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை ஏன் தாக்கல் செய்யவில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
இன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ஆலோசனையில் ஈடுப்பட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நீட் தேர்வு வரும் என கூறிய நிலையில், தற்போதும் அது நிறைவேறவில்லை என குறிப்பிட்ட ஜெயக்குமார் ஆனால் தற்போது வெறும் முட்டையை காட்டுகிறார் உதயநிதி என சாடினார். முட்டையை கூமுட்டை தான் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்று 29 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு விலக்கு வரவில்லை என்றார்.

நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்!! ஆளுநர் பேச்சு!! முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்!!
யூடியூபரான முதல்வர்
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் அச்ச உணர்வுடன் வாழ்வதாகவும் குற்றம்சாட்டி, சிறுபான்மையினரின் வாக்குகளை பெற பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதனை இன்று வரை நிறைவேற்றவில்லை இருக்கின்றார் என சாடினார்.
மேலும், அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்து, தற்போது மக்களை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், தன்னை ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து யூடியூபர் போல பேசும் கருத்துக்களை லைக் பண்ணுங்க,கமண்ட் பண்ணுங்க,ஷேர் பண்ணுங்க என பேசி வருவதாக ஜெயக்குமார் விமர்சித்தார்.