அணு உலையால் பேராபத்து; சீனா கடும் எதிர்ப்பு - மீறி கழிவுநீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

Japan China
By Sumathi Aug 23, 2023 05:46 AM GMT
Report

அணு உலை கழிவுநீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்துள்ளது.

அணு உலை கழிவு

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

அணு உலையால் பேராபத்து; சீனா கடும் எதிர்ப்பு - மீறி கழிவுநீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்! | Japan Release Fukushima Nuclear Plant Water On Sea

அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதில் இருந்த கதரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. அணு உலைகளில் இருந்து வெளியேறிய கதிரியக்க நீரை, பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனர்.

ஜப்பான் முடிவு 

தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு, அந்நாட்டில் யோஷிஹைட் சுகா பிரதமராக இருந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அணு உலையால் பேராபத்து; சீனா கடும் எதிர்ப்பு - மீறி கழிவுநீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்! | Japan Release Fukushima Nuclear Plant Water On Sea

அந்த நீர் கடலில் கலப்பது பாதுகாப்பானது தான் எனவும் தெரிவித்தனர். இருப்பினும். சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடலில் கதிரியக்க நீரை கலந்தால், ஜப்பானில் இருந்து கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்படும் என சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்தன.

இந்நிலையில், புகுஷிமா அணு உலையில் இருந்து கதிரியக்க நீரை, கடலுக்குள் வரும் வியாழன் முதல் திறந்து விடப்படும் என ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.