ஸ்கூல் டிரைவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. ரூ. 83 லட்சம் பணத்தை தொக்கா தூக்கிய நபர்!

United States of America Lottery
By Vinothini Sep 15, 2023 09:46 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சாதாரன நபர் ஒருவர் அதிர்ஷ்டத்தால் பணக்காரர் ஆன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிரைவர்

அமெரிக்க நாட்டில், கெண்டுக்கி நகரில் உள்ள ஜெஃபர்ஸன் கவுண்டி பொதுப் பள்ளியில் பத்து வருடங்களுக்கும் மேலாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ஜேம்ஸ் கீயோன். சமீபத்தில் இவர் பவர்பால் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார்.

james-won-lottery-in-power-play

இவர் வாங்கிய டிக்கெட்டுகளில் நான்கு வெள்ளை நிற பால்கள் சரியாக பொறுந்தியதால், இவருக்கு பரிசுத் தொகையாக சுமார் ரூ.82,93,735 கிடைத்துள்ளது. இவர் எப்பொழுதும் ஒருமுறைக்கு இரண்டு முறை லாட்டரியை விளையாடக் கூடியவர். ஆகவே தற்போது இவருக்கு பரிசு தொகை இரண்டு மடங்காக கிடைத்துள்ளது.

மகிழ்ச்சியில் ஜேம்ஸ்

இந்நிலையில், அவர், "என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஒருமுறைக்கு நான்கு முறை அந்த எண்களை சரி பார்த்தேன். அந்த எண்கள் மாறாமல் அப்படியே இருந்தன. ஆஹா, நமக்கு ஜக்பாட் அடித்துவிட்டது என்பதை அதன்பிறகே உணர்ந்தேன். முதலில் 50,000 அமெரிக்க டாலர் பரிசு விழுந்தது. நாம்தான் எப்போதுமே பலமுறை விளையாடுவோமே என யோசித்துக் கொண்டிருந்த போதுதான், எனக்கு கிடைத்த பரிசுத் தொகை பவர்பிளே காரணமாக இரண்டு மடங்கானது" என்று கூறியுள்ளார்.

james-won-lottery-in-power-play

பரிசு கிடைத்ததும் ஜேம்ஸ் தனது வேலையை விட்டார். இதனை அவரது மனைவியிடம் கூறினார். அந்த தொகையில் வரியை பிடித்துக்கொண்டு மிச்ச பணம் ரூ.59 லட்சம் அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டம் வைத்துள்ளார் ஜேம்ஸ்.