ஆபரேஷன் சக்சஸ் - I am come back... டிஸ்ரேயாஷு வெளியிட்ட புகைப்படம் - டெல்லி அணி உற்சாகம்!
இந்தியா-இங்கிலாந்து இடையே மூன்று விதமான தொடர்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய வெற்றிவாகை சூடியது. இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி அடைந்தது.
இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங் செய்யும் போது டைவ் அடித்த ஸ்ரேயாஷ் ஐயரின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனே பெவிலியன் திரும்பி சிகிச்சை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில், ஸ்கேன் செய்து பார்க்கும்போது, அவரின் இடது தோள்பட்டை இடமாறியிருந்தது தெரியவந்தது.
உடனே, காயத்திலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் பிடிக்கும் என்பதால் ஐபிஎல் தொடரிலும் அவரால் ஆடமுடியாமல் போனது. இதனையடுத்து, ஸ்ரேயாஷ் ஐயருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் நலம் விசாரித்து ட்வீட் செய்து வந்தார்கள். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்த ஸ்ரேயாஷ், விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார்.
Surgery was a success and with lion-hearted determination, I’ll be back in no time ? Thank you for your wishes ? pic.twitter.com/F9oJQcSLqH
— Shreyas Iyer (@ShreyasIyer15) April 8, 2021
தற்போது அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் களத்திற்கு கூடிய விரைவில் திரும்பி விடுவேன். உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டு, அறுவைச் சிகிச்சை முடிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரேயாஷ் வரும் வரை டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை பண்ட் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் அணிக்கு ஸ்ரேயாஷ் திரும்புவார் என்பதால் அணி நிர்வாகம் மகிழ்ச்சியில் உள்ளது.