24 ஆண்டுகள் பள்ளி நாட்களில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர் - பின்னணி என்ன?

Italy
By Sumathi Jul 05, 2023 06:36 AM GMT
Report

24 ஆண்டுகள் பணிகாலத்தில் 20 ஆண்டுகள் ஆசிரியர் ஒருவர் விடுமுறை எடுத்துள்ளார்.

20 ஆண்டு லீவு 

இத்தாலியைச் சேர்ந்தவர் சின்சோ பூலியானா தி லியோ(56). இவர் வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். இதில், 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றன.

24 ஆண்டுகள் பள்ளி நாட்களில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர் - பின்னணி என்ன? | Italy School Teacher Took Leave For 20 Years

உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு, கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் லீவு எடுத்திருக்கிறார். இதனால், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர்.

மாணவர்கள் கொந்தளிப்பு

சமீபத்தில் ஒருமுறை பள்ளிக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார். அப்போதும் கூட ஃபோனில் மெசேஜ் செய்தபடியே இருந்துள்ளார். தற்போதைய பாடத்திட்டம் குறித்து கூட தெரியாமல், சரியான புத்தகம் இல்லாமல் இருந்துள்ளார்.

24 ஆண்டுகள் பள்ளி நாட்களில் 20 ஆண்டுகள் லீவ் எடுத்த ஆசிரியர் - பின்னணி என்ன? | Italy School Teacher Took Leave For 20 Years

இதனால் மாணவர்கள் ஆத்திரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் விசாரித்ததில், பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.