பெண்களே குடிக்காதீங்க.. இளம்பெண்ணை சீரழித்த விவகாரம் - பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு!

Italy
By Sumathi Sep 02, 2023 05:20 AM GMT
Report

பெண்களின் குடிப்பழக்கம் குறித்து பேசிய பிரதமரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் பார்ட்னரும், பத்திரிகையாளருமான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ டாக் ஷோ ஒன்றில் பங்கேற்றார். அதில், ``நீங்கள் டான்ஸ் ஆடச் சென்றால், குடிப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு.

பெண்களே குடிக்காதீங்க.. இளம்பெண்ணை சீரழித்த விவகாரம் - பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு! | Italy Pm Partner Comments Women Not Getting Drunk

ஆனால், நீங்கள் குடித்துவிட்டு உங்கள் உணர்வுகளை இழப்பதைத் தவிர்த்துவிட்டால், நீங்கள் சில பிரச்னைகளில் சிக்குவதையோ, ஓநாயை சந்திப்பதையோ தவிர்க்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு

பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மீதே மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் இவரின் நடவடிக்கை குறித்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்நாட்டின் எதிர்க்கட்சி செனட்டர் சிசிலியா டி’எலியா, `அவர்களால் பெண்களைக் குறை கூறாமல் இருக்க முடியாது.

பெண்களே குடிக்காதீங்க.. இளம்பெண்ணை சீரழித்த விவகாரம் - பிரதமரின் கணவர் சர்ச்சை பேச்சு! | Italy Pm Partner Comments Women Not Getting Drunk

தனியாக வெளியே செல்லாதீர்கள், இருட்டாக இருக்கும் இடத்திற்குச் செல்லாதீர்கள், ஆத்திரமூட்டும் வகையில் உடை அணியாதீர்கள் என்பதையெல்லாம் இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பெண் அதிகமாகக் குடித்தால், அவள் தலைவலியை எதிர்பார்க்கலாம்,

வன்கொடுமையை அல்ல’ எனக் கடுமையாக சாடியுள்ளார். இதற்கு, ஜியாம்ப்ருனோ, `குடிபோதையில் இருக்கும் பெண்களை வன்கொடுமை செய்ய ஆண்களுக்கு உரிமை உண்டு’ என்று ஒருபோதும் சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.