யூடியூப் மூலம் கோடீஸ்வரரான நபர் வீட்டில் திடீர் ரெய்டு - கொத்தாக சிக்கிய ரூ.24 லட்சம்!
உத்திர பிரதேசத்தில் யூடியூப் மூலம் கோடீஸ்வரரான நபர் வீட்டில் திடீரென ஐ.டி ரெய்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யூடியூபர்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தஸ்லிம். இவர் பல ஆண்டுகளாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் 'டிரேடிங் ஹப் 3.0' (Trading Hub 3.0') என்ற யூடியூப் சேனலில் டிரேடிங் தொடர்பான வீடியோகளை அதில் பதிவிட்டு அதன்மூலமாக சம்பாரித்து வருகிறார்.
இதில் அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை சம்பாரித்ததாக தெரியவந்தது. இதனை இவர் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது.
ரெய்டு
இந்நிலையில், வருமான வரித்துறை இவரது வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது இவரது வீட்டில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து யூடியூபரின் சகோதரர் இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய சகோதரன் மார்க்கெட்டிங் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்துக்கு ஏற்கெனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எந்தத் தவறான வேலையையும் செய்யவில்லை. இது தஸ்லிமை குறிவைத்து தாக்கும் திட்டமிட்ட சதி'' என்று கூறியுள்ளார்.