சூரிய அனலில் வெளியாகும் எக்ஸ் கதிர்கள் - இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் எக்ஸ்ரே கதிர்வீச்சைப் படம்பிடித்துள்ளது.
ஆதித்யா எல்1
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது.
இந்நிலையில் ஆதித்யாவிண்கலம் தனது பயணத்தின்போது மேற்கொண்ட சில ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டது. அதில், “ஆதித்யா எல்1 விண்கலம் கடந்த 29 ஆம் தேதி சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும்
முதல் க்ளிக்
அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) November 7, 2023
HEL1OS captures first High-Energy X-ray glimpse of Solar Flares
?During its first observation period from approximately 12:00 to 22:00 UT on October 29, 2023, the High Energy L1 Orbiting X-ray Spectrometer (HEL1OS) on board Aditya-L1 has recorded the… pic.twitter.com/X6R9zhdwM5
இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராப் வடிவிலான படத்தையும் வெளியிட்டுள்ளது.