உறங்கிய ரோவர்; என்ன நடந்தது, மீண்டும் இயங்காவிட்டால் என்னவாகும்?

ISRO Chandrayaan-3
By Sumathi Sep 04, 2023 03:49 AM GMT
Report

ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் தூக்க நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவு நாள்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. தொடர்ந்து, லேண்டரின் சாய் தளத்திலிருந்து 6 சக்கரங்களை கொண்ட ரோவர் தரையிறங்கியது.

உறங்கிய ரோவர்; என்ன நடந்தது, மீண்டும் இயங்காவிட்டால் என்னவாகும்? | Isro Wake Up Pragyan After 14 Days

நிலவில் 14 நாட்களுக்கு சூரிய ஒளி இருக்கும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி போய் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்து அனுப்பியது. அதில் ஆக்ஸிஜன், மாங்கனீஸ், சிலிகான், இரும்பு, கால்சியம், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

உறக்கத்தில் ரோவர்

இந்நிலையில், நிலவில் சூரிய ஒளிப்படும் 14 நாட்கள் முடிந்து நிலவு நாள் தொடங்கியது. அதனால் அந்த பகுதியில் அடுத்த 14நாட்களுக்கு சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் இருளில் இருக்கும்.

உறங்கிய ரோவர்; என்ன நடந்தது, மீண்டும் இயங்காவிட்டால் என்னவாகும்? | Isro Wake Up Pragyan After 14 Days

இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில், 14 நாட்கள் கழித்து ரோவரை மீண்டும் இயக்க வைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பூமிக்கு லேண்டர் வழியாக தகவல்களை பரிமாறிய கருவிகள் அனைத்தும் தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்கள் கழித்து சூரிய ஒளியில் கிடைத்த ஆற்றலை வைத்துக் கொண்டு பிரக்யான் மீண்டும் செயலாற்றும். ஒரு வேளை செயலாற்றாமல் போனால் அது எப்போதும் அங்கேயே இருந்துவிடும் என தெரிவித்துள்ளது.