நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

India Indian Space Research Organisation ISRO Chandrayaan-3
By Jiyath May 02, 2024 05:28 AM GMT
Report

நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைத்துள்ளது

சந்திரயான் 3 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா? | Isro Confirms Water In South Pole Of The Moon

இதனையடுத்து அதிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் சந்திராயன் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைத்துள்ளது.

டீசல் ரயில்கள்.. 1 லிட்டர் போட்டால் எவ்வளவு மைலேஜ் தரும்? ஆச்சரிய தகவல்!

டீசல் ரயில்கள்.. 1 லிட்டர் போட்டால் எவ்வளவு மைலேஜ் தரும்? ஆச்சரிய தகவல்!

ஆய்வு முடிவு 

சந்திராயன் 3 திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வு முடிவில், நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா? | Isro Confirms Water In South Pole Of The Moon

அந்த தண்ணீர் 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த கட்டமாக சந்திரயான்- 4 திட்டத்தின் மூலம் தென் துருவத்தில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.