இளம்பெண்ணை இரக்கமின்றி இழுத்து சென்ற தீவிரவாதிகள் - மீட்கப் போராடும் காதலன்!
ஹமாஸ் தீவிரவாதிகள் இளம்பெண் ஒருவரை இழுத்து சென்றதால் அவரது காதலன் மீட்க போராடி வருகிறார்.
தாக்குதல்
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி தரை, கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் இசை திருவிழாவில் கலந்து கொண்ட 260 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பினர் 210 பேரை சிறை பிடித்து சென்றனர். அந்த சமயம் துப்பாக்கி சூடு சத்தத்துடன் மக்கள் அலறியடித்தபடி, வயல்வெளி பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோக்கி ஓடினர்.
ஆனால், ஹைமனை பயங்கரவாதிகள் பிடித்து விட்டனர். அவர்களில் ஒருவர் தான் இன்பார் ஹைமன் (வயது 27) என்ற இளம்பெண், இவர் இஸ்ரேலின் ஹைபா நகரை சேர்ந்த ஓவிய மாணவி.
இவர் இசை திருவிழாவின்போது, தன்னார்வலராக கலந்து கொண்டார், இவரையும் பிணைக்கைதியாக பிடித்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், மோட்டார் பைக்குகளில் வந்த பயங்கரவாதிகள் அவரை பிடித்து இழுத்தபடி சென்றனர்.
காதலன் போராட்டம்
இந்நிலையில், அந்த பெண்ணின் காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அவரை மீட்பதற்காக அதிகாரிகளை விடாமல் சந்தித்து பேசி வருகிறார். இது குறித்து ஆலன், "அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், இரக்கம் காட்டுங்கள். அவளை உயிருடன் வைத்திருங்கள். அதிகம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்.
பணய கைதிகளுக்கு உணவு, நீர் மற்றும் மருந்துகளை கொடுங்கள். கவனம் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார். பணய கைதிகள் மீட்புக்கே இஸ்ரேல், இங்கிலாந்து அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுவே மிக அவசியம்.
எந்தவொரு ராணுவ நடவடிக்கை அல்லது தரைவழி தாக்குதலுக்கு முன்பும் அவர்கள் திரும்ப வேண்டும். நிச்சயம் அவள் திரும்பி வருவாள். ஆனால், முடிந்தவரை நாமும் அவள் திரும்புவதற்கான எல்லா விசயங்களையும் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.