ஹமாஸ் குழுவினர் எங்க இருந்தாலும் தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தரைவழித் தாக்குதல்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 1 மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் இந்த மோதலை ஆரம்பித்திருந்தாலும் கூட இப்போது இஸ்ரேல் தான் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், இப்போது தரைவழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் அறிவிப்பு
இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுங்கள். எங்கள் ராணுவ நடவடிக்கையை மேலும் முன்னெடுத்து செல்வதில் உறுதியாக உள்ளோம். தெற்கு காசா பகுதி உள்பட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.