ரத்தகாடாக மாறும் புனிதபூமி; சிதறிய உடல்கள், தொடரும் போர் - 1,100ஐ கடந்த பலி!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளது.
வெடிக்கும் போர்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்.
500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். தொடர்ந்து, இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
1,100 பேர் பலி
இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது, துப்பாக்கிச் சண்டை 3வது நாளாக தொடா்ந்து வருகிறது.
இதற்கிடையில், காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருதரப்புக்கு இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளது.