ருத்ர தாண்டவமாடும் ஈரான்; சமாளிக்க முடியல - உலக நாடுகளிடம் கையேந்தும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிர நிலையை அடைந்துள்ளது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டது.
இதனால் இஸ்ரேல் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில், ரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
திணறிய இஸ்ரேல்
அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலில், முக்கியமாக ஈரானின் அணு மையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ராணுவ ரீதியாக வலிமையான நாடு. இஸ்ரேல் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டால் மட்டுமே அச்சுறுத்தல்களை தடுக்க முடியும்.
மற்ற நாட்டின் உதவி இருந்தால் மட்டுமே ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்பே செயலிழக்கச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.