குழந்தைகளின் பல்லை பிடுங்கி கொடூர கொலை - ஹமாஸ் குறித்த திடுக்கிடும் தகவல்!
குழந்தைகளின் பற்களை பிடுங்கி ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
பயங்கர தாக்குதல்
கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து, இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து வருகிறது.இதனால் பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்து வருகின்றன.
தொல்லியல் ஆராய்ச்சி
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட குழந்தைகளின் பற்களை பிடுங்கி, தீயிட்டு எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் தொல்லியல் நிபுணர்கள் மூலம் கிடைத்துள்ளது.
முன்னதாக, போரின் தொடக்கத்தில் இஸ்ரேலிய மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அவர்களின் தலையை வெட்டி துண்டித்தது, பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை கொன்றது,
இறந்த உடல்களில் வெடிக்குண்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.