துபாயில் பார்ட்டி; கடுப்பில் பிசிசிஐ - கழட்டிவிடப்பட்ட இஷான் கிஷான்?
இஷான் கிஷன், துபாயில் பார்ட்டியில் ஈடுபட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இஷான் கிஷன்
இஷான் கிஷன் ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, வெஸ்ட் இன்டீஸ் தொடர், ஆசியக் கோப்பை, உலககோப்பை, மற்றும் டி20 தொடர் ஆகிய அத்தனை தொடர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து வந்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது திறமையை நிரூபித்தும் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விடுப்பு கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு அது மறுக்கப்பட்டுள்ளது. அந்த தொடரில் கடைசி 2 போட்டிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அதிருப்தி
ஆனால் கிஷன் அணியுடனே பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் மற்றும் டி20 இல் ஓய்வு கேட்டதோடு, டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். அதன்பின், தொடர்ந்து விளையாடி வரும் காரணத்தால் மனச்சோர்வு ஏற்பட்டதாக முன்வைத்த கோரிக்கையின்படி பிசிசிஐ அவரை விடுவித்தது.
இந்நிலையில் அவர் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து சில தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் பார்ட்டி செய்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த பிசிசிஐ ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது.
அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பிஎல் தொடரில் தான் இஷான் கிஷன் களமிறங்குவார் என கருதப்படுகிறது.