பாஜக-வை விட்டு தனிக்கட்சியா? அண்ணாமலை பதில்
தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகி கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்த முன்னாள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, கமல்ஹாசன் நல்ல நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் தவறாக புரிந்து கொண்டு பேசிவிட்டார், அடுத்தமுறை வாய்ப்பு வரும் போது சரியாக திருத்தத்தை பதிவு செய்வார்.
விஜய் கட்சியின் கொள்கையையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கையையும் மக்கள் முன் வைக்கட்டும், அவர்கள் முடிவு செய்வார்கள்.
பள்ளிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது, தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலம் என்று எப்படி கூறுவது? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தனிக்கட்சி தொடங்கப்போகிறீர்களா? என்ற கேள்வி ”என்னை பார்த்தால் அப்படி தெரிகிறதா?” என பதிலளித்துள்ளார்.
