16 வயது சிறுமிக்கு மரண தண்டனை - அந்த பாவம்தான் ஈரானை பழிவாங்குகிறதா?

Iran Iran-Israel War
By Sumathi Jun 19, 2025 06:26 AM GMT
Report

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்தான் ஈரானை பழிவாங்குவதாக கூறப்படுகிறது.

மரண தண்டனை

ஈரான் - இஸ்ரேல் மோதல் ஆறாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் 585 பேர் கொல்லப்பட்டும், 1,326 பேர் காயமடைந்தும் உள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை - அந்த பாவம்தான் ஈரானை பழிவாங்குகிறதா? | Iranian Girl Atefeh Story Viral In Social Media

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் உலகை உலுக்கிய 16 வயது சிறுமி அடெஃபே சஹாலாஹ்வின் விவகாரம் பேசுப்பொருளாகி உள்ளது. அதன்படி ஓர் அப்பாவி குழந்தையின் ஆவியால் ஈரான் சபிக்கப்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

யுத்தம் ஆரம்பம் - டிரம்பிற்கு ஈரானின் உச்ச தலைவர் கமேனி பதிலடி

யுத்தம் ஆரம்பம் - டிரம்பிற்கு ஈரானின் உச்ச தலைவர் கமேனி பதிலடி

கவனம் பெறும் விவகாரம்

அடெஃபே ஒரு ஆணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஈரானின் மத ஒழுங்கு காவல்துறை குற்றம் சாட்டியது. அதன்பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது தாய் சாலை விபத்தில் இறந்துவிட்டார். தந்தை போதைக்கு அடிமையானதால், அவர் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார்.

iran israel war

ஈரானியச் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. ஆனால், பிபிசி ஆவணப்படம் ஒன்றின்படி, அடெஃபேவுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பை கொண்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, ஆவணங்களை திரித்து அவரது வயதை 22 என்று குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றியதாக குறி[ப்பிடப்பட்டிருந்தது.