அமெரிக்கா அமைதியா இருக்கனும்.. இல்லையெனில் மற்ற நாடுகளுக்கு போர் பரவும் - ஈரான் எச்சரிக்கை!

United States of America Iran Israel-Hamas War
By Vinothini Oct 28, 2023 10:45 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஈரான் நாடு அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்தனர் மேலும், சிலரை பிணை கைதியாக வைத்துள்ளனர். இவர்களது தாக்குதலால் இஸ்ரேல் எதிர்தாக்குதலை நடத்தியது, இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

iran-warns-america-over-israel-gaza-issue

தொடர்ந்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் பெண்கள் குழந்தைகள் என பலர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இன்னும் மனசு வலிக்குது, ஆனால் இது என் கடமை.. போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளரின் நெகிழ்ச்சி சம்பவம்!

இன்னும் மனசு வலிக்குது, ஆனால் இது என் கடமை.. போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளரின் நெகிழ்ச்சி சம்பவம்!

ஈரான் எச்சரிக்கை

இந்நிலையில், இஸ்ரேல் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுத்தால் அமெரிக்காவிற்கு எதிராக புதிய போர்முனைகள் ஆரம்பிக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இது குறித்து, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்டொல்லாஹியன், "அமெரிக்கா மற்ற நாடுகளை அமைதியாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறது.

Hossein Amirabdollahian

ஆனால், அமெரிக்கா மட்டும் முழுக்க முழுக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா இதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தால் அமெரிக்காவிற்கு எதிராகவும் புதிய முனைகள் ஆரம்பிக்கும் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

காசா பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால் நிலைமை கையை விட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது.

இந்தப் போர் இத்துடன் முடிவடைய வேண்டுமா அல்லது போர் தீவிரம் அதிகரித்து அது மற்ற இடங்களுக்குப் பரவ வேண்டுமா என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.