இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தில் ஈரான் தாக்குதல்- நெதன்யாகுவின் நிலை என்ன?
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெநேதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
Fars செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கெய்பர் (Kheibar) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதேசமயம் இஸ்ரேல் விமானப்படை தளபதி இருந்த இடமும் தாக்குதலுக்குள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நெதன்யாகுவின் நிலைமை குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன, மேலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஹோர்முஸ் நீரிணை முடக்கம் போன்ற சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.
இஸ்ரேல், ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி அளித்து லெபனானில் குண்டு வீசியது. அதேசமயம், குவைத்தில் அமெரிக்க விமானங்கள் வீழ்ந்தன.
சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்கள், ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலை மேலும் தீவிரப்படுத்தி, மத்திய கிழக்கு பகுதியை முழுமையாக அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.