யுத்தம் ஆரம்பம் - டிரம்பிற்கு ஈரானின் உச்ச தலைவர் கமேனி பதிலடி
ஈரான் உச்ச தலைவர் கமேனி போர் தொடங்கியதாக அறிவித்துள்ளார்.
போர் ஆரம்பம்
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டது.
இதனால் இஸ்ரேல் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது.
கமேனி எச்சரிக்கை
இந்நிலையில் ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளித்திருக்கிறார் என்று தனக்கு தெரியும். அவர் எளிதான இலக்கு. அவரை கொல்லப் போவதில்லை. கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என டிரம்ப் எச்சரித்தார்.
به نام نامی #حیدر، نبرد آغاز میگردد
— KHAMENEI.IR | فارسی 🇮🇷 (@Khamenei_fa) June 17, 2025
علی با ذوالفقار خود، به #خیبر باز میگردد#الله_اکبر pic.twitter.com/yGYrXUDGoK
தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போர் தொடங்கி விட்டது. இஸ்ரேலின் பயங்கரவாத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
