டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம் - ஈரான் அறிவிப்பு
டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தப்படுவதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
டிரம்ப் பேச்சுவார்த்தை
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. தொடர்ந்து தாக்குதல் அதிகரித்த நிலையில், இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவானது.
இந்நிலையில் ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த செயலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
ஈரான் அறிவிப்பு
இதனையடுத்து கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார்.
மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பை ஈரான் மறுத்தது.
தற்போது அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.