ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியழித்த அமெரிக்கா - மத்திய கிழக்கை சூளும் போர் மேகம்
ஈரானின் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் தேதி, இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், 10 நாட்களாக இரு நாடுகளுக்குமிடையே போர் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும், ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இருப்பிடம் எங்களுக்கு தெரியும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானை தாக்கிய அமெரிக்கா
இந்நிலையில், இன்று காலை ஈரானில் உள்ள ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் அமைதிக்கு திரும்பா விட்டால் கூடுதல் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், அமெரிக்காவின் தாக்குதலை முன்னரே கணித்திருந்த ஈரான், 3 அணுசக்தி நிலையங்களையும் சிறிது காலத்திற்கு முன்பு காலி செய்துவிட்டதாகவும் இதனால் அணுக்கசிவு எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பஹ்ரைன் அமெரிக்க கடற்படைத்தளம்
மேலும், ஈரானின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதில் கிடைக்கும். பஹரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
ஈரான் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும், ஹௌதி உள்ளிட்ட அதன் ஆதரவு அமைப்புகளை வைத்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா கடற்படை தாக்குதல்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியான தாக்குதலில் ஈரானை இறங்கினால், மத்திய கிழக்கு நாடுகளும் போருக்குள் வரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு அடிபணியாமல் உள்ள ஒரே நாடான ஈரானிற்கு, ரஷ்யா மற்றும் சீனா தனது நேரடி ஆதரவை வழங்காவிட்டாலும் ராணுவ ரீதியான மறைமுக உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில், வேலை நிமித்தமாக லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களின் தொழில் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.