ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் ஒருவர்கூட வாங்கப்படாதது ஏன்?
csk
kkr
mi
srh
By Jon
14வது ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது, இதில் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட வாங்கப்படவில்லை. நேற்றைய ஏலத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணி வீரர்கள் அதிகளவில் வாங்கப்பட்டனர். மேற்கிந்திய தீவுகளில் ஒரு வீரரும், இலங்கை அணி சார்பில் ஒருவர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
நேற்றைய ஐபிஎல் ஏலத்தில், பெரும்பாலும் ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்குதான் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு துறைகளிலும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மேற்கிந்திய தீவுகள், மற்றும இலங்கை அணியில் குறைவாக இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறது.