ஐபிஎல் ஏலம்: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? நேரடி ஒளிபரப்பை காணலாம்

csk kkr rcb mi
By Jon Feb 18, 2021 03:36 PM GMT
Report

ஐபிஎல் 14வது சீசனுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 292 வீரர்களில், 164 பேர் இந்தியர்கள் மற்றும் 125 பேர் வெளிநாட்டவர்கள். இந்தாண்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதால், அதிரடி காட்டும் வீரர்களையும், மிதவேக பந்து வீச்சளர்களையும் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் ஏலத்தை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம். மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த அணியிடம் எவ்வளவு பணம்? 11 காலியிடங்களை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, வெறும் 35.4 கோடி ரூபாய் மட்டுமே கையில் வைத்துள்ளது.

அதே நேரத்தில் வெறும் 3 காலியிடங்களை நிரப்ப ரூபாய் 10.75 கோடியை கையில் வைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 9 காலியிடங்களை கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) சுமார் 53.20 கோடியை கையில் வைத்துள்ளது.