ஐபிஎல் ஏலத்துக்கு தேர்வான வீரர்களின் பட்டியல் வெளியானது
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏலம் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல்முறையாக சென்னையில் ஏலம் நடைபெறுகிறது. கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வேலைகளில் பிசிசிஐ மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்காக 1097 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 292 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்தது. 292 பேர் கொண்ட பட்டியலில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.
மொத்தமாக எட்டு அணிகளுக்கு 61 வீரர்களே தேவைப்படும் பட்சத்தில் 292 வீரர்கள் இறுதிப்பட்டியலில் இருக்கின்றனர். எட்டு அணிகளில் பஞ்சாப் அணி மட்டுமே அதிகமான பணம் வைத்திருக்கிறது. மொத்தம் 9 வீரர்களை ஏலம் எடுக்க ரூ.53.20 கோடி வைத்திருக்கிறது. இதனால் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் ஏலம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு அணியின் பெயரை மாற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களின் அடிப்படை விலையோடு பட்டியலைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.