ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: சன்ரைசர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் ஆட்சேபனை

csk kkr rcb mi
By Jon Mar 02, 2021 12:10 PM GMT
Report

ஐபிஎல் 14வது சீசனுக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்பட ஆறு இடங்களில் மட்டுமே நடைபெறும் என்ற பிசிசிஐயின் முடிவுக்கு சன்ரைசர்ஸ், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது.

சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும். கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய ஐந்து இடங்களில் மட்டுமே போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்கு ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அதாவது, சொந்த மைதானத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும், அதில் ஐந்து அல்லது ஆறில் வெற்றி பெற்றால் எளிதில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம். ஐந்து இடங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்பதால் நாங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டிய நிலை உள்ளது என ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.