பிப்ரவரி 18ல் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது - பிசிசிஐ
cricket
sports
rr
mi
By Jon
ஐபிஎல் தொடரின் 14 வது சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ள தேதியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 14வது சீசன் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து அணிகளும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அன்று தன்னால் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
தற்போது 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் ஏலம் நடைபெறும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.