ஐபிஎல் ஏலம்: டோனியால் தமிழக வீரர்கள் புறக்கணிப்பா?
ஐபிஎல் சீசன் 14வது போட்டிகளுக்கான ஏலம் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக வீரர்களை புறக்கணிப்பதாக சமூகவலைத்தளங்களில் பேச்சுகள் அடிபடுகிறது.
இதற்கு காரணம், 2014ம் ஆண்டிலிருந்து தமிழக அணியிலிருந்த ஷாருக்கானை தற்போது பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது, இவரை தக்கவைக்க சிஎஸ்கே முயற்சிக்கவில்லை என தெரிகிறது.
இதேபோன்று சென்னை அணியிலிருந்த லெக் ஸ்பின்னரான பியூஷ் சால்வாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருக்கிறது.
இதற்கிடையே சாய் கிஷோர், என். ஜெகதீசன் போன்றோரையும் சிஎஸ்கே அணியோ, டோனியோ ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.