ஐபில் 2021 திருவிழா: சென்னை அணியில் மீண்டும் இடம்பெற்ற சின்ன தல

cricket raina thala
By Jon Jan 22, 2021 05:05 PM GMT
Report

ஐபிஎல் 2021ம் ஆண்டுக்கான வீரர்களை விடுவிக்கும் தினம் இன்று நடைபெற்றது இதில் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட வீரர்களை விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த ஈபிள் போட்டிக்கான வேர்களை தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் அணைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்றனர்.  


இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது சென்னை அணி எந்த வீரர்களை விடுவிக்கும் மற்றும் தக்கவைத்து கொள்ளும் என்பது தான். ஏறத்தாழ சென்னை அணி எந்த வேர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதேபோல தான் நிகழ்ந்தது. சென்னை அணியில் இருந்து முரளி விஜய்,கேதார் ஜாதவ், பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அதிரடியாக விடுவிக்கப்பட்டனர்.

மேலும் கடந்த ஆண்டு சொந்த பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ரெய்னா அவர்களை சென்னை அணி ரீடைன் செய்துள்ளது. அவர் மட்டுமின்றி கேப்டன் டோனி,டு பிளேஸிஸ்,பிராவோ,கைகுவாட் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் சென்னை ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.