IPL: ரூ.3.6 கோடிக்கு ஏலம் போன பழங்குடியின வீரர்.. தீவிர தோனி ரசிகர் - யார் இந்த ராபின் மின்ஸ்?
குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் ஏலம்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அடிப்படை தொகையான ரூ.20 லட்சம் பிரிவிலிருந்த ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினத்தைச் சேர்ந்த ராபின் மின்ஸை (21) கைப்பற்ற பல அணிகளும் தீவிரம் காட்டின. இறுதியில் குஜராத் அணி ரூ.3.6 கோடிக்கு அவரை வாங்கியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இத்தொடரில் கால்பதிக்கும் முதல் பழங்குடி கிரிக்கெட்டர் என்ற பெருமையை ராபின் மின்ஸ் பெற்றுள்ளார்.
யார் இந்தராபின் மின்ஸ்?
இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ், ஜார்கண்ட் சீனியர் அணிக்காக விளையாடவில்லை என்றாலும் U19 அணிக்காக சிறப்பாக விளையாடி 5 போட்டிகளில் 3 சதங்கள் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு கர்னல் சி கே நாயுடு டிராபியிலும் விளையாடினார். ராபின் மின்ஸ் தனது சிறுவயது முதலே தீவிர தோனி ரசிகர் ஆவார். மேலும், எம்எஸ் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சார்யாவே ராபினுக்கும் பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.