ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு சிக்கல் - மும்பை இந்தியன்ஸ் அணியில் ட்விஸ்ட்
கேப்டன் பதவியில் இருந்த ஹர்திக் பாண்டியா நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இவர் 2024 ஐபிஎல் தொடருக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய போது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது என்ற தகவல் பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் வெளியானது.
கேப்டன் பதவி?
ஐபிஎல் தொடரில் ஒரு வீரருக்கும் ஐபிஎல் அணிக்கும் இடையே ஆன ஒப்பந்தம் பிசிசிஐ முன்னிலையில் தான் கையெழுத்தாகும். அதில் எந்த ஒரு அணியோ, வீரரோ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதிமுறைகளை சேர்த்துக் கொள்ள முடியாது.
எனவே, எப்போது வேண்டுமானாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கலாம். அதற்கு எந்த தடையும் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை அந்த அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் யாரும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.