அமமுக நேர்காணல் தேதி அறிவிப்பு

election announcement dhinakaran
By Jon Mar 05, 2021 12:39 PM GMT
Report

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அமமுக. இந்த தேர்தலில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அதாவது வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளது, 3ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.