இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி!

earthquake world dead
By Jon Jan 16, 2021 08:01 AM GMT
Report

இந்தோனேசியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவானதால் கடும் அதிர்வு ஏற்பட்டது, இதனால் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தால் ஏராளமான மக்கள் வீதிகளில் திரண்டணர்.  

இந்த நிலநடுக்கத்தால் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் நோயாளிகள் மருத்துவர்கள் என பலரும் சிக்கியுள்ளனர்.

இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.