நிலவில் ஒரு இரவு தான் பிரக்யான் ரோவர் தாக்குபிடிக்கும்; அப்புறம் வாய்ப்பில்ல - இந்தியாவை சீண்டிய சீனா!
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில் உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகிறது.
சந்திரயான் 3
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின்
தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது. நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் பாராட்டியுள்ளன.
சீனா கருத்து
இந்நிலையில், சீனா சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் ரோவர் நிலவில் ஒரு நாள் (நிலவில் ஒருநாள் என்பது 14 பூமி நாட்களாகும்) மட்டுமே நீடிக்கும்.
நிலவில்இரவு வந்தால் ரோவரால் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால் சீனாவின் யுடு-2 ரோவர் நிலவில் நீண்டகாலம் பணிபுரிந்து சாதனை படைத்துள்ளது. இது நியூக்ளியர் பவருடன் செயல்பட்டது.
விண்வெளி துறையில் சீனாவுடன் சேர்ந்து செயல்பட பிற நாடுகள் விரும்பினால் அதற்கான கதவு என்பது திறந்தே உள்ளது. இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
14 நாட்களுக்கு பிறகு நிலவின் தென்துருவத்தில் சூரியஒளி படாது என்பதால் இந்த கருவிகள் செயல் இழக்க வாய்ப்புள்ளது. இதனை அறிந்தே இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.