மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற மாணவி, தெருவில் கிடக்கும் சோகம் - மீட்டு தர தாய் கோரிக்கை!
தென்னிந்திய மாணவி ஒருவர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று தெருவில் கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் உள்ள மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். சமீபத்தில் அவரது தயார் சையிடா வகாஜ் பாத்திமா 2 மாதங்களாக தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கவலையில் இருந்தார்.
இந்த சமயத்தில் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் மனஅழுத்தத்தில் உள்ளார். அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடி சென்றனர். இதனால், உணவு வாங்க கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார். சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார் என கூறியுள்ளனர்.
தாயார் கடிதம்
இந்நிலையில், அந்த இளம்பெனின் தயார் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு தனது மகளை மீட்டு தர கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "தெலுங்கானாவைச் சேர்ந்த எனது மகள் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, ஆகஸ்ட் 2021இல் டெட்ராய்டில் தனது முதுகலைப் படிப்பிற்காகச் சென்றார். அவர் தொடர்ந்து எங்களுடன் டச்சில் தான் இருந்தார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை..
Syeda Lulu Minhaj Zaidi from Hyd went to persue MS from TRINE University, Detroit was found in a very bad condition in Chicago, her mother appealed @DrSJaishankar to bring back her daughter.@HelplinePBSK @IndiainChicago @IndianEmbassyUS @sushilrTOI @meaMADAD pic.twitter.com/GIhJGaBA7a
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 25, 2023
எனது மகளின் உடைமைகளை யாரோ திருடிவிட்டதாகவும் இதனால் உணவுக்குக் கூட வழியில்லாமல் பட்டினியாக இருப்பதாகவும் அங்குள்ள ஹைதராபாத் இளைஞர்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, இதற்குப் பதிலளித்த சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், "சையிடா லுலு மின்ஹாஜ் வழக்கைப் பற்றி நாங்கள் இப்போதுதான் அறிந்தோம். விரைவில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.