ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - இந்திய நர்சுக்கு பிரம்படி தண்டனை கொடுத்த நாடு!
இந்திய நர்ஸ் ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை
சிங்கப்பூரில் உள்ள ரஃபிள்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய செவிலியரான எலிபே சிவ நாகு , அங்கு சிகிச்சை பெற்ற ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்த ஒரு ஆண் பார்வையாளரை 'நோய்த்தொற்று நீக்கம்' செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி, எலிபே கழிவறையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பிரம்படி தண்டனை
இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை குற்றத்தை நர்ஸ் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எலிபே சிவ நாகு, இரண்டு நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஓராண்டு மற்றும் இரண்டு மாத சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.