World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் - அமைச்சர் உதயநிதி கண்டனம்!

Udhayanidhi Stalin Cricket Pakistan India ICC World Cup 2023
By Jiyath Oct 15, 2023 02:55 AM GMT
Report

பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிரான ரசிகர்களின் செயலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஸ்ரீராம் கோஷம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் - அமைச்சர் உதயநிதி கண்டனம்! | Indian Fans Chanted Against Pak Player Udayanidhi

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பும்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

உதயநிதி கண்டனம்

இந்நிலையில் முகமது ரிஸ்வானுக்கு எதிரான ரசிகர்களின் இந்த செயலுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வீடியோவை பதிவிட்டு அவர் கூறியதாவது "விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை ஏற்க முடியாது.

கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் 'ரோஹித் ஷர்மா' - கெயில் வாழ்த்து!

கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தில் 'ரோஹித் ஷர்மா' - கெயில் வாழ்த்து!

விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.