துப்பாக்கிமுனையில் இந்திய ராணுவ வீரர் கடத்திக் கொலை.. மர்ம கும்பலின் வெறிச்செயல் - கொடூரம்!
மணிப்பூரில் ராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கிமுனையில் கடத்தி மர்ம கும்பல் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
மணிப்பூரில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். இவர் ராணுவ வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் ராணுவ வீரரை கடத்தி சென்றுள்ளனர். அப்பொழுது அவரது 10 வயது மகன் பார்த்துள்ளார்.
அவர் போலீசாரிடம் கூறுகையில், "3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் முன்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி ஒன்றை எடுத்து ராணுவ வீரரின் தலையில் வைத்து, வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றனர்" என்று கூறியுள்ளார்.
கொலை
இந்நிலையில், அந்த ராணுவ வீரரின் உடல் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோங்ஜாம் என்ற பகுதியில் இருந்து கிழக்கே உள்ள குனிங்தெக் என்ற கிராமத்தில் இருந்துள்ளது. நேற்று காலை அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது உடலை சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர்.
மேலும், அவரது தலையில் துப்பாக்கியால் சுட்ட காயம் இருந்துள்ளது. மணிப்பூரில் இந்த மர்ம கும்பலின் துணிகரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ராணுவம் இவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.