இங்கிலாந்து அணியை பந்தாடிய இந்தியா அணி அபார வெற்றி..!

Rohit Sharma Indian Cricket Team
By Thahir Jul 12, 2022 05:00 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் போட்டி

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இங்கிலாந்து அணியை பந்தாடிய இந்தியா அணி அபார வெற்றி..! | India Won The Match

இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது.

பந்துவீச்சில் மிரட்டல்

பும்ராஹ் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியை பந்தாடிய இந்தியா அணி அபார வெற்றி..! | India Won The Match

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ராஹ் 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் வெறும் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான்,

மற்ற வீரர்களுக்கு வேலை வைக்காமால் தாங்களாகவே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 76 ரன்களும், ஷிகர் தவான் 31 ரன்களும் எடுத்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று - தொண்டர்கள் அதிர்ச்சி