அரிசி ஏற்றுமதிக்கு தடை... சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

United States of America India Migrants
By Vinothini Jul 22, 2023 01:28 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் அமெரிக்காவில் இந்தியாகியர்கள் முந்தியடித்து வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்றுமதிக்கு தடை

உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய தாக்குதல் நடத்துவதால் உலகளாவிய கோதுமை விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் பாசுமதி இல்லாமல் மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைக்கும்படி இந்தியா உத்தரவிட்டுள்ளது.

india-stops-exporting-rice

சில மாதங்களாகவே "எல் நினோ" (El Nino) பருவகால மாற்றங்களால் நிகழும் சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டும், உயர்ந்து வரும் விலைவாசியாலும், உள்நாட்டில் தடையின்றி அரிசி வினியோகம் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக நிறுவனம்

இதனை தொடர்ந்து, "ஏற்றுமதி சந்தையில் அரிசி விலை மேலும் உயரப் போகிறது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.4100 ($50) லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ரூ.8000 ($100) அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கலாம். சந்தை எவ்வளவு உயரும் என்பதைப் பார்க்க விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் காத்திருக்கிறார்கள்" என்று சிங்கப்பூரை சேர்ந்த ஒரு சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகர் கூறியுள்ளார்.

india-stops-exporting-rice

அதிகளவில் நீர் தேவைப்படும் பயிரான அரிசியின் உற்பத்தி, 90% ஆசியாவில் நடக்கிறது. எல் நினோ வானிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி நிலை உற்பத்தியை தாறுமாறாக முடக்கியுள்ளது. இதனால் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளால், அரிசி ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளிலும், அதன் விலை உயர்ந்து வருகிறது.