இந்தியாவுடன் மோதும் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் விலகல்

cricket team news
By Jon Feb 13, 2021 06:30 PM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார். சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

முதல் டெஸ்டில் விளையாடிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில், நாளை பிப்ரவரி 13ம் திகதி சென்னையில் தொடங்கவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோப்ரா ஆரச்சரல் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது. வலது முழங்கை காயத்துக்காக ஆரச்சர் ஊசிப் போட்டுக் கொண்டார்.

முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு வலது முழங்கையில் அசவுகரியம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.