31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டத்தை தொடங்கியது பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது.
நேற்று முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரஹானே, ரோகித், பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது.
இதில் அதிகபட்சமாக, ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் விராட் கோலி, 27 ரன்களில் அவுட் ஆனார்.