ஜனாதிபதியை சந்திக்கும் I.N.D.I.A கூட்டணி, முந்திக்கொண்ட அமித்ஷா - என்ன காரணம்?
இந்திய ஜனாதிபதியை இன்று இந்தியா கூட்டணி சந்திக்கும் நிலையில் அமித்ஷா சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதனை தற்போது வரை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 எம்.பி.கள் அடங்கிய குழு மணிப்பூர் பயணம் மேற்கொண்டு, நிவாரணம் முகாம்களில் தங்கி இருந்த மக்களை சந்தித்து பேசினர்.
சந்திப்பு
இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் குடியரசு தலைவரை இன்று 11 மணியளவில் சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து பேச உள்ளனர். மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்ட 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவரைச் சந்திக்கத் திட்டமிட்ட நிலையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.