பஞ்சாயத்து தலைவரான துப்புரவு பணியாளர்: கேரளாவில் நெகிழ்ச்சி
india kerala presdient
By Jon
கேரளாவில் பெண் துப்புரவு பணியாளர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். கேரள மாநிலம் தலாவூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவல்லி.
கடந்த 10 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் அவர் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாய முன்னணி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
இந்த குறித்து பேசிய ஆனந்தவல்லி, பஞ்சாயத்து தலைவராக கட்சி என்னை தேர்வு செய்யும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.