இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்களுக்கு பிறகு உயிருடன் வந்த நபர்

india-house-dead
By Jon Jan 10, 2021 02:36 PM GMT
Report

உயிரிழந்ததாக இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65) மற்றும் விக்டோரியா.

கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்கு சென்றுள்ளார். இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் இன்று வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்டோரிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த வேலையில் மருத்துவமனையில் இருந்து கொரோனாவால் முதியவர் ஒருவர் இறந்ததாக அழைப்பு ஒன்று வந்தது. இதனையடுத்து மருத்துவமனையின் பிணவறையில் இருந்த முதியவரின் உடல் விக்டோரியாவுக்கு காண்பிக்கப்பட்டது. அவரும் அது தனது கணவரின் உடல் தான் என தெரிவித்தார்.

உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார். அந்த நபரை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது விக்டோரியாவின் மகன் ஒருவர் இது நமது தந்தை தான என சந்தேகம் உள்ளது என கேட்டுள்ளார்.

ஆனால், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரை விக்டோரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர். கடந்த 30-ம் தேதி வேறு ஒரு நபரை விக்டோரியா அடக்கம் செய்ததில் இருந்து 4 நாட்கள் கழித்து ஜனவரி 3-ம் தேதி ஜூலியோ வீட்டிற்கு வந்தார்.

கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் நடந்த விவகரத்தை மருத்துவ ஊழியர்கள் விக்டோரியாவிடம் தெரிவித்தனர். அந்த தகவலையடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார்.

அதன்பின் தனது கணவரை கண்ணீர் மல்க அனைத்துக்கொண்டார். தனது கணவர் இறந்துவிட்டார் என நினைத்த மனைவிக்கு, கணவர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.