இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு உயிரிழந்தார்

cricket dead female Chandra Nayudu
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்தியாவின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு (88), இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனான சி.கே நாயுடுவின் மகள் ஆவார். இவருக்கு சிறுவயது முதலிலிருந்தே கிரிக்கெட் மீது ஆதித ஆர்வம் இருந்தது.

அவருடைய ஆர்வம் அவரை உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயலாற்ற வைத்தது. அதைத் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக 1970களில் சந்திரா நாயுடு பணியை தொடங்கினார்.

சந்திரா நாயுடு ஆங்கில பேராசிரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க பல முயற்சிகளை அவர் செய்துள்ளார். அவரது மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  


Gallery